India
62 வயது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய 32 வயது உ.பி இளைஞர்.. பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் !
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் தாஜ்மகாலை பார்ப்பதற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு சென்றுள்ளார்.
ஆக்ராவுக்கு சென்றவர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் 32 வயதாக ககன்தீப் என்பவரும் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறியுள்ளனர். இருவரும் ஆக்ராவின் பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ககன்தீப் அந்த அமெரிக்க பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த பெண் அமெரிக்கா சென்றாலும் பலமுறை தனது காதலனை சந்திக்க இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
அதோடு விரைவில் திருமணம் செய்வதாக கூறி ககன்தீப் பலமுறை அந்த அமெரிக்க பெண்ணிடம் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளார். இந்த பெண்ணுடனான பழக்கம் ககன்தீப்பின் உறவினர்களுக்கும் தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒருகட்டத்தில் ககன்தீப் திருமணம் செய்வதாக தொடர்ந்து ஏமாற்றி வந்ததை அந்த பெண் உணர்ந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த மே 4ஆம் தேதி டெல்லி காவல்துறையில் அந்த பெண் ககன்தீப் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த டெல்லி போலிஸார் ஆக்ராவில் இருந்த ககன்தீப்பை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். அமெரிக்க பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!
-
“இந்திய நாட்டை விற்க பா.ஜ.க-வுக்கு வெட்கமாக இல்லையா?” : மக்களவையில் ராகுல் காந்தி எம்.பி. சரமாரி கேள்வி!