India
62 வயது பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிய 32 வயது உ.பி இளைஞர்.. பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் !
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் தாஜ்மகாலை பார்ப்பதற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு சென்றுள்ளார்.
ஆக்ராவுக்கு சென்றவர் அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் 32 வயதாக ககன்தீப் என்பவரும் தங்கியிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக மாறியுள்ளனர். இருவரும் ஆக்ராவின் பல்வேறு இடங்களுக்கும் ஒன்றாக சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ககன்தீப் அந்த அமெரிக்க பெண்ணை திருமணம் செய்வதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த பெண் அமெரிக்கா சென்றாலும் பலமுறை தனது காதலனை சந்திக்க இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.
அதோடு விரைவில் திருமணம் செய்வதாக கூறி ககன்தீப் பலமுறை அந்த அமெரிக்க பெண்ணிடம் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளார். இந்த பெண்ணுடனான பழக்கம் ககன்தீப்பின் உறவினர்களுக்கும் தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒருகட்டத்தில் ககன்தீப் திருமணம் செய்வதாக தொடர்ந்து ஏமாற்றி வந்ததை அந்த பெண் உணர்ந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த மே 4ஆம் தேதி டெல்லி காவல்துறையில் அந்த பெண் ககன்தீப் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த டெல்லி போலிஸார் ஆக்ராவில் இருந்த ககன்தீப்பை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். அமெரிக்க பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!
-
“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
-
”தொடருவாரா ஸ்டீபன் ஃப்ளெமிங்.. முடிவெடுத்த CSK.. தோனி சொன்னது இதுதான்” - முழு விவரம் உள்ளே!
-
ஆதாரத்தோடு பேசுங்கள்...! : முதலமைச்சர் பேச்சை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு!