India
பெண்களே எச்சரிக்கை! Lift கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த டாக்சி ஓட்டுநர்: 150 CCTV உதவியோடு கைது!
சண்டீகர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பரை சந்திக்க கடந்த ஏப்ரல் 30-ம் தேதி டேராடூன் சென்றுள்ளார். பின்னர் அங்கே இருந்து மீண்டும் தனது ஊருக்கு வர எண்ணிய இளம்பெண், தனது பெண் தோழி ஒருவர் உதவியோடு வந்துள்ளார். அப்போது அவர், இந்த பெண்ணை இரவு சுமார் 9 மணி அளவில் சிம்லா புறவழிச் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அங்கே அந்த பெண் பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்த நேரம், அந்த வழியே டாக்சி ஒன்று சென்றுள்ளது.
அப்போது டாக்சி ஓட்டுநர் லிப்ட் வேண்டுமா என்று கேட்க இந்த பெண்ணும் ISBT பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே தானும் அந்த வழியாக செல்வதாக கூறிய ஓட்டுனரின் பேச்சை நம்பிய இளம்பெண், அவரது டாக்சியில் ஏறியுள்ளார். சில மணி நேரத்தில் ISBT பகுதி வந்துவிடவே, ஓட்டுநர் அதையும் தாண்டி சென்றுள்ளார்.
இதனால் அலறி கத்தவே, ஓட்டுநர் மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஒரு காட்டு பகுதிக்கு கொண்டு சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பணம், மொபைல் போன் உள்ளிட்டவையை எடுத்துக்கொண்டு, இந்த பெண்ணை அதே காட்டுக்குள் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
காட்டில் இருந்து வெளியே வர பயந்த அந்த பெண்,விடிய விடிய காட்டுக்குள் இருந்து, பின்னர் தனது பகுதிக்கு சென்று நடந்தவற்றை தன் தோழியிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தோழி உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் சுமார் 150 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ஓட்டுநரின் கார் எண்ணை கண்டறிந்தனர். அதன்பேரில் விசாரிக்கையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பீஹாரி நகர் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் குமார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த மணிஷ் குமாரை கைது செய்த அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !