India
40 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 13 பேர் பலி: அதிகாலையில் நடந்த கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்பிள் குரவ் என்ற இடத்திலிருந்து கோரேகானுக்கு 41 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து ராய்காட்டின் கோபோலி என்ற பகுதிக்கு இன்று அதிகாலை வந்தபோது திடீரென நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.
இதில் பேருந்து முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார், மீட்புக் குழுவினர் விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இதுவரை இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்களது உடல்களை மீட்டு அவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. படுகாயம் அடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து எப்படி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!