India

கேள்வி கேட்ட கணவன் மீது ஆசிட் வீசிய மனைவி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கூப்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் தப்பு குப்தா. இவரது மனைவி பூனம். இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்று இருந்த பூனம் இரவு வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கணவன் தப்பு குப்தா, 'ஏன் தாமதமாக வீட்டிற்கு வந்தாய்' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் மனைவியை கொடுமையாக அடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் வீட்டின் குளியல் அறையில் இருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து கணவன் தப்பு குப்தா முகத்தில் வீசியுள்ளார். இதில் எரிச்சல் தாங்காமல் அவர் அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு வந்து பார்த்த அப்பகுதி மக்கள் ஆசிட் வீச்சால் வெந்து கொண்டிருந்த அவரது முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடிபோதைக்கு அடிமையான தப்பு குப்தா தினமும் குடித்து விட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். அதில் ஆத்திரமடைந்ததால்தான் அவர் கணவன் மீது ஆசிட் வீசியது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தனது மனைவி பூனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தப்பு குப்தா போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மும்பை : காதலனோடு இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. புகைப்படம் எடுக்கசென்ற இடத்தில் நடந்த சோகம் !