India
நடு வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்திய போர் விமானம்.. பயிற்சியின் போது நடந்த விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமானங்கள் பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் அருகே சென்றபோது இரண்டு விமானங்கள் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோதிக் கொண்ட இரண்டு விமானமும் மொரீனா என்ற பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த அங்குச் சென்ற போலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்துக்களான விமானம் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் விபத்து நடப்பதற்கு முன்பே விமானத்தின் பைலட் வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து பனி மூட்டம் காரணமாக நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டபோது எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் உயர் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று ராஜஸ்தானிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளனது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரத்திற்குள் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதால் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!