India
நடு வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்திய போர் விமானம்.. பயிற்சியின் போது நடந்த விபரீதம்!
ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமானங்கள் பயிற்சிக்காகப் புறப்பட்டுச் சென்றது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் அருகே சென்றபோது இரண்டு விமானங்கள் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோதிக் கொண்ட இரண்டு விமானமும் மொரீனா என்ற பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இது பற்றி தகவல் அறிந்த அங்குச் சென்ற போலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்துக்களான விமானம் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் விபத்து நடப்பதற்கு முன்பே விமானத்தின் பைலட் வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து பனி மூட்டம் காரணமாக நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பயிற்சியில் ஈடுபட்டபோது எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் உயர் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று ராஜஸ்தானிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடகை விமானம் ஒன்று விபத்துக்குள்ளனது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரத்திற்குள் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதால் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!