India
முதல் இந்திய தயாரிப்பு.. 'TATA INDICA' அறிமுகமாகி 25 வருடங்கள் நிறைவு..கேக் வெட்டி கொண்டாடிய ரத்தன் டாடா!
இந்தியா சுதந்திரம் அடையும் முன்னர் 1945-ம் ஆண்டு கிழக்கிந்திய ரயில்வே நிறுவனத்திடம் இருந்து ரூ.25 லட்சத்துக்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள ஆலையை டாடா குழுமம் வாங்கியது. இது இந்திய வாகன உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்தது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1954 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன உற்பத்தியில் இறங்கியது. முதலில் வர்த்தக வாகன உற்பத்தியில் மும்முரமாக இருந்த டாடா மோட்டார்ஸ் பின்னர் பயணிகள் வாகன உற்பத்தியிலும் இறங்கியது.
அதன் தொடர்ச்சியாக 1991-ம் ஆண்டு டாடா சியரா, 1992-ம் ஆண்டு டாடா எஸ்டேட், 1994-ம் ஆண்டு டாடா சுமோ, 1998-ம் ஆண்டு டாடா சபாரி என பல வாகனங்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தாலும் அவை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாக இருக்கவில்லை. இதன் காரணமாக முழுக்க முழுக்க இந்தியாவில் வாகனத்தை தயாரிக்கவேண்டும் என டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு அதற்கான வேலையில் இறங்கியது.
அதன் பயனாக 1998-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் அன்று முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 1.15 லட்சம் நபர்கள் இந்த காரை வாங்க முன்பதிவு செய்தனர். ஆனால், இந்த கார் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தாலும் அது கொடுத்த அனுபவத்தில் இருந்து தற்போது உலகின் முன்னணி மோட்டார் தயாரிப்பு நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.
முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான டாடா இண்டிகாவை அறிமுகம் செய்து தற்போது 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது அதனை கொண்டாடும் விதமாக ரத்தன் டாடா கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”