India
பேசும்போது திடீரென வெடித்த Realme 8 செல்போன்.. துண்டான கை விரல்: மருத்துவமனையில் வாலிபர்!
உத்தர பிரதேச மாநிலம் ஹிசாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.16 ஆயிரம் கொடுத்து Realme 8 செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்துள்ளது. இதில் அவரது விரலில் சிறிய தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 'என் விரல்களில் சிறிய தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தேன்' என ஹிமான்ஷி தெரிவித்துள்ளார்.
அதோடு வெடித்த செல்போனையும், அதன் பில்லையும் இணைத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவரின் பதிவு வைரலாகி வருகிறது.
2019ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பில் இருந்தபோது செல்போன் வெடித்ததில் பள்ளி சிறுவன் காயமடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாங்கிய புதிய செல்போன் வெடித்ததில் 28 வயது வாலிபர் ஒருவர் காயமடைந்தார். இப்படி தொடர்ச்சியாகவே இந்தியாவில் செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!