India
BSNL வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. - வரப்போகிறது 4G, 5G சேவை.. எப்போது தெரியுமா ?
நமது தாத்தா காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் ஒரே மொபைல் நெட்ஒர்க் என்றால் அது BSNL தான். அந்த காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் இந்த நெட்ஒர்க் சேவை, இந்தியர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை இந்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் ஏர்டெல், ஜியோ, ஒடோபோன் - ஐடியா உள்ளிட்ட தனியார் நெட்ஒர்க்கையே பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்தியாவில் பலரும் இன்னமும் BSNL-ஐ பயன்படுத்துகின்றனர். இப்படி புது புது நெட்ஒர்க் வந்த போதிலும், அந்தந்த நிறுவனங்கள் தங்கள் சேவையை 3G, 4G, தற்போது 5G வரை உயர்த்தியுள்ளது.
ஆனால் BSNL-ஓ தங்கள் நெட்ஒர்க்கை இன்னுமும் 3G சேவையிலேயே வைத்து வருகிறது. மொபைல் போன் கூட தற்போது 5G வரை வந்துவிட்டது. இதனிடையே BSNL-ஐ 4Gக்கு மாற்றும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன. இருப்பினும் அதனை செவிகொடுக்காத அந்நிறுவனம், வெறும் சிம் கார்டை மட்டும் 4Gக்கு மாற்றி, சேவையை 3Gலேயே வைத்துள்ளது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அடுத்தாண்டு BSNLக்கு 5ஜி சேவை வரும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த 2023-ம் ஆண்டு BSNL வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கு BSNL வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும்" என்று கூறினார். இதனால் BSNL வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!