India
நீதிமன்றம் அருகே நின்றிருந்த இளம் பெண் சுட்டுக்கொலை.. பட்டப்பகலில் பஞ்சாபில் நடந்த கொடூரம்!
பஞ்சாப் மாநிலம், பலியானவர் பதிண்டாவில் உள்ள கோட்ஷாமீர் பகுதியைச் சேர்ந்தவர் குல்விந்தர் கவுர். இவர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்றுகொண்டு இருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் தாங்கள் எடுத்து வந்திருந்த துப்பாக்கியால் குல்விந்தர் கவிரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு வந்த போலிஸார் ரத்தவெள்ளத்திலிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் குல்விந்தர் கவுர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குல்விந்தர் கவுர் தொலைப்பேசி மற்றும் கைப்பை ஒன்றை போலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த 2 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நீதிமன்ற வளாகம் அருகே இளம் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !