India
டீ பிரியர்கள் அதிர்ச்சி.. மூலிகை டீ குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி: காரணம் என்ன?
உத்தர பிரதேச மாநிலம் நக்லா கான்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது வீட்டில் வழக்கம்போல் அவரது மனைவி மூலிகை டீ போட்டுள்ளார். அப்போது வீட்டிலிருந்த சிவானந்தம், இவரது ஆறு வயது மகன் ஷிவாங் மற்றும் ஐந்து வயது மகன் திவ்யான்ஷ் ஆகியோர் டீ குடித்துள்ளனர்.
மேலும் அப்போது வீட்டிற்கு வந்த மாமா ரவீந்திரசிங் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சோப்ரான் ஆகியோருக்கும் மூலிகை டீ குடித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்திலேயே ஐந்து பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து பேரும் அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஐந்து பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிவானந்தத்தின் மனைவி டீ தயாரித்த மூலிகைச் செடி விஷத்தன்மை கொண்டதாக இருந்தது என தெரியவந்துள்ளது. மேலும் விஷம் கலந்து டீ கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மூலிகை டீ குடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!