India
"மொழியை வைத்து மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் BJP": நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,நேற்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் தனது நடைபயணத்தை நிறைவுசெய்தார்.
இதையடுத்து, ஆந்திர மக்களின் அமோக ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரப் பிரதேச நடைபயணத்தின் போது பலதரப்பட்ட குழுக்களுடன் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மக்களைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், அமராவதியில் ஒரே தலைநகரை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களை ஒருவரையொருவர் மோத வைக்கும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கிடப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீவிரமான இந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!