India
"மொழியை வைத்து மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் BJP": நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,நேற்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் தனது நடைபயணத்தை நிறைவுசெய்தார்.
இதையடுத்து, ஆந்திர மக்களின் அமோக ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரப் பிரதேச நடைபயணத்தின் போது பலதரப்பட்ட குழுக்களுடன் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மக்களைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், அமராவதியில் ஒரே தலைநகரை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களை ஒருவரையொருவர் மோத வைக்கும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கிடப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீவிரமான இந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!