India
"மொழியை வைத்து மக்களிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் BJP": நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,நேற்று காலை ஆந்திரப் பிரதேசத்தில் தனது நடைபயணத்தை நிறைவுசெய்தார்.
இதையடுத்து, ஆந்திர மக்களின் அமோக ஆதரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரப் பிரதேச நடைபயணத்தின் போது பலதரப்பட்ட குழுக்களுடன் தாங்கள் நடத்திய கலந்துரையாடல்கள் மக்களைப் பாதிக்கும் பல முக்கிய விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும், அமராவதியில் ஒரே தலைநகரை உருவாக்கவும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சாதி, மதம், மொழி, உணவு, உடை போன்றவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களை ஒருவரையொருவர் மோத வைக்கும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் விலைவாசி, வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கிடப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீவிரமான இந்த பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தும் காங்கிரஸ் கட்சியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!