India
பென்ஸ் CEO-வாகவே இருந்தாலும் எங்க ஊரில் இப்படிதான் போகணும் -இணையத்தில் வைரலாக ட்வீட் !
உலகின் ஆடம்பர கார் நிறுவங்களின் ஒன்று பென்ஸ். இந்த காரை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள் என அளவில் உலகம் முழுவதும் ஏராளமானோர் இந்த காருக்கு ரசிகராக இருக்கின்றனர். மேலும், பலர் வாங்க விரும்பும் கனவு காராகவும் பென்ஸ் இருக்கிறது.
பென்ஸ் நிறுவனத்தின் இந்திய CEO-வாக இருப்பவர்தான் மார்ட்டின். இவரது பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மஹாராஷ்டிராவில் உள்ள முக்கிய நகரான புனேவில் டிராஃபிக்கில் சிக்கியுள்ளார். டிராஃபிக் சரியாகாது என்று தோன்றியதால் அதில் இருந்து இறங்கி கொஞ்சம் கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று ஆட்டோவை பிடித்து செல்லவேண்டிய இடத்துக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "புனேவின் அழகான சாலைகளில் உங்களின் S-class பென்ஸ் கார் டிராஃபிக்கில் சிக்கினால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை காரை விட்டு இறங்கி, கொஞ்சம் கிலோ மீட்டருக்கு நடந்தே சென்று ஆட்டோவை பிடிப்பீர்களா?" என்று கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பலரும் இதை பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் பென்ஸ் காருக்கே CEO-வாக இருக்கலாம்,, ஆனால் எங்க ஊரில் இப்படிதான் போகணும் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும், புனேவின் போக்குவரத்துக்கு நெரிசலை விமர்சிக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!