India
கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்குச் சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் என 51 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காடு - வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 41 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றுலாவந்த பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!