India
கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்குச் சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் என 51 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காடு - வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 41 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றுலாவந்த பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!