India
கேரளாவில் கோர விபத்து.. KSRTC பேருந்து மீது மோதிய சுற்றுலா பேருந்து.. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி!
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்குச் சுற்றுலா வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் என 51 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காடு - வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதியுள்ளது.
இதில் பள்ளி மாணவர்கள் வந்த சுற்றுலா பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் சடலமாக மீட்டனர். மேலும் 41 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுற்றுலாவந்த பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !