India
15 நிமிடத்தில் பறந்து செல்லலாம்.. பெங்களூருவில் அறிமுகமாகும் ஹெலிகாப்டர் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பெங்களூருவில் எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வார்கள்.மேலும், அடிக்கடி மழை பெய்து கொண்டே இருப்பதால், கூடுதல் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இது பொதுமக்களுக்குத் தினந்தோறும் தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், ola, uber போன்ற கார் சேவைகளைப்போன்று பிளேட் இந்தியா என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாகப் பெங்களூரு விசமான நிலையத்திலிருந்து HAL பகுதி வரை ஹெலிகாப்டர் சேவை இயக்க உள்ளது.
பொதுவாக வாகனத்தில் சென்றால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும். ஆனால் ஹெலிகாப்டரி சென்றால் 15 நிமிடங்களிலேயே அங்கு சென்று விடலாம். மேலும் 5 முதல் 6 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒரு டிக்கெட் விலை ரூ.3500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் இரு மார்க்கத்திலும் ஒரு முறை மட்டுமே சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது காலை 9 மணி, மாலை 4 மணி மட்டுமே தற்போதைக்கு பயண சேவை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் இணையத்தில் தொடங்கியுள்ளது.
பிளேட் இந்தியா என்ற நிறுவனம் இதுபோன்று மகாராஷ்டிராவில் இருந்து மும்பைக்கும், பூனேவில் இருந்து ஷீரடி இடையே சேவையை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?