India
15 நிமிடத்தில் பறந்து செல்லலாம்.. பெங்களூருவில் அறிமுகமாகும் ஹெலிகாப்டர் சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பெங்களூருவில் எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வார்கள்.மேலும், அடிக்கடி மழை பெய்து கொண்டே இருப்பதால், கூடுதல் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இது பொதுமக்களுக்குத் தினந்தோறும் தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், ola, uber போன்ற கார் சேவைகளைப்போன்று பிளேட் இந்தியா என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாகப் பெங்களூரு விசமான நிலையத்திலிருந்து HAL பகுதி வரை ஹெலிகாப்டர் சேவை இயக்க உள்ளது.
பொதுவாக வாகனத்தில் சென்றால் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகும். ஆனால் ஹெலிகாப்டரி சென்றால் 15 நிமிடங்களிலேயே அங்கு சென்று விடலாம். மேலும் 5 முதல் 6 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். ஒரு டிக்கெட் விலை ரூ.3500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தினமும் இரு மார்க்கத்திலும் ஒரு முறை மட்டுமே சேவை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது காலை 9 மணி, மாலை 4 மணி மட்டுமே தற்போதைக்கு பயண சேவை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் இணையத்தில் தொடங்கியுள்ளது.
பிளேட் இந்தியா என்ற நிறுவனம் இதுபோன்று மகாராஷ்டிராவில் இருந்து மும்பைக்கும், பூனேவில் இருந்து ஷீரடி இடையே சேவையை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!