India
ராஜஸ்தான் : "நீ எப்படி பொதுஇடத்தில் தண்ணீர் குடிக்கலாம்" -பட்டியல் சமூகத்தவரை கொடூரமாக தாக்கிய கும்பல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது பட்டியலின சிறுவன் ஒருவர் வகுப்பறையில் இருந்து தண்ணீரை குடிக்க பானையை தொட்டதால் அடித்துக்கொல்லப்பட்டார். அதேபோன்ற ஒரு சம்பம் மீண்டும் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் திக்கா என்ற பகுதியை சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் தனது பண்ணையில் இருந்து தனது மனைவியுடன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அவர் குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடித்ததால் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதுரராம் மேக்வாலுக்கு தலை, முதுகு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த இளைஞர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சாதிவெறி வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!