India
SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பு.. 47 லட்சம் ஊதியம்.. மாற்றுத்திறனாளிக்கு வேலை வழங்கிய MICROSOFT !
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த யாஷ் சோனகியா என்பவர் தனது 8 வயதில் பார்வையை இழந்துள்ளார். எனினும் இது குறித்து மனம் தளரான அவர், பள்ளிப்படிப்பை முடித்து இந்தூரில் உள்ள ஸ்ரீ கோவிந்த்ராம் சேக்சாரியா கல்லூரியில் B.Tech படிப்பில் சேர்ந்துள்ளார்.
அங்கு SCREEN READER உதவியுடன் பட்டப்படிப்பை முடித்த அவர், கோடிங் கற்றுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் சிலரின் வழிகாட்டுதலோடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு வேலை வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி அவருக்கு ஆண்டு ஊதியமாக இந்திய மதிப்பில், 47 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் யாஷ் சோனகியா விரைவில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் சில ஆண்டுகள் அவர் வீட்டில் இருந்தே வேலை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அனுமதித்துள்ளது.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!