India
15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!
புதுச்சேரி திப்புராயபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (54). இவர் கடந்த 24 ஆம் தேதி 15 ஆடுகளைத் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது ஆடுகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஒரு ஆணும், பெண்ணும் ராஜாவின் ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து இவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வரும் முத்திரை பாளையத்தைச் சேர்ந்த வசந்தா (54), அவரது ஊழியர் அந்தோனி (50) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பண தேவைக்காக ஆடுகளைத் திருடியதாகவும், இதேபோல் பல இடங்களில் ஆடு திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் திருடிய 15 ஆடுகளில் 6 ஆடுகளை விற்பனை செய்ததுள்ளனர். இதனை அடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 9 ஆடுகளைப் பறிமுதல் செய்த போலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!