India
15 ஆடுகளை திருடி விற்பனை செய்த பெண்.. 'காப்பு' மாட்ட வைத்த சி.சி.டி.வி காட்சிகள்!
புதுச்சேரி திப்புராயபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (54). இவர் கடந்த 24 ஆம் தேதி 15 ஆடுகளைத் தனது வீட்டருகே உள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை வந்து பார்த்தபோது ஆடுகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஒரு ஆணும், பெண்ணும் ராஜாவின் ஆடுகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து இவர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் 100 அடி சாலையில் டீ கடை நடத்தி வரும் முத்திரை பாளையத்தைச் சேர்ந்த வசந்தா (54), அவரது ஊழியர் அந்தோனி (50) என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் பண தேவைக்காக ஆடுகளைத் திருடியதாகவும், இதேபோல் பல இடங்களில் ஆடு திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் திருடிய 15 ஆடுகளில் 6 ஆடுகளை விற்பனை செய்ததுள்ளனர். இதனை அடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 9 ஆடுகளைப் பறிமுதல் செய்த போலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !