India
இந்திய தேசியக் கொடியில் Made in China வாசகம்.. அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள்: மவுனம் காக்கும் ஒன்றிய அரசு!
கனடாவில் சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மாநிலங்களின் சபாநாயகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசிய் கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர். அவர்கள் எடுத்துச் சென்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்ததைப் பார்த்து சபாநாயகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் , தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் இருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இணையவாசிகள் பலரும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக தேசியக் கொடியைக் கூட இறக்குமதி செய்வதா? மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் தேசியக் கொடியில் 'Made in China' என்ற வாசகம் எப்படி இடம் பெற்றது என்பது குறித்து இன்னும் ஒன்றிய அரசு பதில் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!