India
சாலையில் நடந்து சென்ற 2 பேரை இடித்துத் தூக்கி வீசிய கார்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூரன்முக்கு பகுதியில் சாலையோரம் இரண்டு வாலிபர்கள் பேசிக் கொண்டு நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்குப் பின்னால் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீது மோதியுள்ளது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கார் சாலையோரம் இருந்த புதரில் கவிழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே கார் ஓட்டுநர் மற்றும் இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த இரண்டு இளைஞர்களையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் ஆபத்தா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !