India
தூங்கிக்கொண்டிருந்த மனைவி.. தூக்கிச்சென்று ரயிலின் முன் வீசிய கொடூர கணவர்..வெளிவந்த பதைபதைக்கும் வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் வசய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள நடைமேடையில், பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அண்ட் நடைமேடையின் வழியே ரயில் வந்துகொண்டிருந்தது.
அதை கவனித்த அந்த பெண்ணின் கணவர், திடீரென அவரை நடைமேடையில் இருந்து இழுத்து சென்று, தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தனது குழந்தைகளை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த பெண்ணின் கணவர் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி, தாதர் பகுதிக்கு சென்று பின்னர் கல்யான் பகுதிக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
கணவர் மனைவிக்கு இடையே நடந்த சண்டையே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம் என் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த பலரும் அந்த கொடூர கணவரை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!