India
“தேசியக்கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள்” : பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!
நாடுமுழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேசியக்கொடியை மக்கள் கட்டாயம் வாங்க வைக்கும் வகையில், ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்கினால்தான் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தராகண்ட் பா.ஜ.க தலைவரின் கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உத்தராகண்ட் பா.ஜ.க தலைவர் மஹேந்திர பட் கூறுகையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களை இந்த நாடு நம்பத் தயாராக இல்லை. தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள், தேசப்பற்று உள்ளவர்கள் யார்?. இல்லாதவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!