India
“தேசியக்கொடி ஏற்றாத வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள்” : பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பா.ஜ.க தலைவர்!
நாடுமுழுவதும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளோம். இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தேசியக்கொடியை மக்கள் கட்டாயம் வாங்க வைக்கும் வகையில், ரேஷன் கடையில் தேசியக்கொடி வாங்கினால்தான் உணவுப் பொருட்கள் கிடைக்கும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தராகண்ட் பா.ஜ.க தலைவரின் கருத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உத்தராகண்ட் பா.ஜ.க தலைவர் மஹேந்திர பட் கூறுகையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றப்படாத வீடுகளில் வசிக்கும் மக்களை இந்த நாடு நம்பத் தயாராக இல்லை. தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் வீடுகளின் புகைப்படங்களை அனுப்புங்கள், தேசப்பற்று உள்ளவர்கள் யார்?. இல்லாதவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு தடை... "மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும்"- முதலமைச்சர் வரவேற்பு!
-
வக்ஃபு சட்டத்தின் முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை... இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு !
-
“பாஜகவிடம் அடிமையாக அதிமுக இருப்பதற்கான காரணம் இதுதான்...” - தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. பேச்சு!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் - புதிய திட்டத்தின் சிறப்பு என்ன?