India
கம்பத்தில் கட்டி முதியவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற குடும்பம்.. ஒடிசாவில் கொடூரம்!
ஒடிசா மாநிலம், கோராபும் மாவட்டத்திற்குட்பட்ட பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் குர்ஷா மணியக்கா. முதியவரான இவருக்கும் அவரது மகனுக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது முதியவர் வீட்டின் மேற்கூரையை உடைத்தாக கூறப்படுகிறது. இதனால் அரவது மகன் முதியவரைத் தாக்கியுள்ளார். மேலும் அவரது அண்ணன், மருமகள் ஆகிய அனைவரும் சேர்ந்து கொண்டு முதியவரை கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவர் பின் ஒருவராக முதியவர் கட்டியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலிஸாருக்கு எதுவும் தகவல் கொடுக்காமல் முதியவர் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
மேலும் முதியவரைத் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள குடும்பத்தினரை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!