India
மாயமான வாலிபர் வழக்கில் திடீர் திருப்பம்.. மகனை கொலை செய்த தாய்: விசாரணையில் வெளிவந்த உண்மை!
உத்தர பிரதேச மாநிலம், மோடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனுஜ் குமார். இவர் கடந்த ஜூலை 18ம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி நவாரி என்ற பகுதியில் சாலையோரத்தில் இருந்து அனுஜின் சடலத்தை போலிஸார் மீட்டுள்ளனர்.
இதையடுத்து, மாயமான அனுஜ் குமார் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அனுஜ் குமாரின் தாயாருக்கு தேவேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மகன் அனுஜ் குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தாயாரை அவர் கண்டித்துள்ளார். இதையடுத்து தனது ரகசியம் தெரிந்ததால் மகனைக் கொலை செய்ய அவரது தாய் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து தாய் மற்றும் அவரது நண்பர் தேவேந்திரா ஆகிய இருவரும் சேர்ந்து அனுஜ் குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மூடப்பட்ட 5 அரசுப்பள்ளிகள்.. சேர்க்கை இல்லை என காரணம் கூறிய அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை!
-
‘டெல்லிக்கு அடிபணியும் தவெக அரசு… முதுகெலும்பற்ற கோழை முதல்வர் விஜய்’ : திமுக IT Wing கடும் விமர்சனம்!
-
CSK-விலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்.. பிரிந்த 18 ஆண்டுகால கூட்டணி.. அடுத்த பயிற்சியாளர் யார்?
-
விஜய் இனியும் கீழ்த்தரமாகப் பேசினால்... : ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
-
தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத... : பூமணி மறைவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!