India
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், 'Go First airline' விமான நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்று, அங்கு வந்து நின்று புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமான சக்கரத்தில் மோதியது.
இதில் அந்த காரானது சக்கரத்தின் அடியில் சென்றதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விமானத்திற்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பின்னர் திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருகிறது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!