India
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், 'Go First airline' விமான நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்று, அங்கு வந்து நின்று புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமான சக்கரத்தில் மோதியது.
இதில் அந்த காரானது சக்கரத்தின் அடியில் சென்றதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விமானத்திற்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பின்னர் திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருகிறது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!