India
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், 'Go First airline' விமான நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்று, அங்கு வந்து நின்று புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமான சக்கரத்தில் மோதியது.
இதில் அந்த காரானது சக்கரத்தின் அடியில் சென்றதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விமானத்திற்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பின்னர் திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருகிறது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!