India
புறப்பட தயாராக இருந்த விமானத்தில் மோதிய கார் ! 'இண்டிகோ' விமானங்களுக்கு என்ன ஆனது?
டெல்லியிலிருந்து பாட்னாவிற்கு செல்வதற்காக 'இண்டிகோ' விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக நின்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், 'Go First airline' விமான நிறுவனத்திற்கு சொந்தமான கார் ஒன்று, அங்கு வந்து நின்று புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமான சக்கரத்தில் மோதியது.
இதில் அந்த காரானது சக்கரத்தின் அடியில் சென்றதால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் விமானத்திற்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எந்தவித சேதாரமும் ஏற்படவில்லை. பின்னர் திட்டமிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருகிறது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் கார் ஒன்று மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!