India
லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!
கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் எலபுர்கா தாலுகா பின்னாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்பா. இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அங்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பின்னர் நேற்று இரவு சொந்த கிராமத்திற்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பானுபுரா கிராமத்தில் எதிரில் வந்த லாரி மோதியதில் ஸ்கார்ப்பியோ கார் சுக்குநூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே தேவப்பா, அவரது மருமகள் கிரிஜாம்மா, அண்ணன் மகள்களான சாந்தம்மா, பாரர்வதம்மா மற்றும் உறவினரான கஸ்தூரம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஓட்டுனர் ஹர்ஷவர்தன குழந்தைகள் பஸ்ராஜ், புட்டராஜ் , பூமிகா உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் விழா முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது குடும்பத்தினர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!