India
லாரி மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார் : பிறந்தநாள் பார்ட்டி முடித்துவிட்டு திரும்பிய 5 பேர் பலி!
கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டம் எலபுர்கா தாலுகா பின்னாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவப்பா. இவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் அங்கு பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பின்னர் நேற்று இரவு சொந்த கிராமத்திற்கு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பானுபுரா கிராமத்தில் எதிரில் வந்த லாரி மோதியதில் ஸ்கார்ப்பியோ கார் சுக்குநூறாக நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே தேவப்பா, அவரது மருமகள் கிரிஜாம்மா, அண்ணன் மகள்களான சாந்தம்மா, பாரர்வதம்மா மற்றும் உறவினரான கஸ்தூரம்மா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஓட்டுனர் ஹர்ஷவர்தன குழந்தைகள் பஸ்ராஜ், புட்டராஜ் , பூமிகா உட்பட நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிறந்தநாள் விழா முடித்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது குடும்பத்தினர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.
Also Read
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!