India
"கிட்ட வராதீர்கள், என் பையில் வெடிகுண்டு இருக்கிறது" -விமானத்தில் அனைவரையும் அதிரவைத்த பயணி!
உத்தரபிரதேச மாநிலம் பாட்னாவிலிருந்து தலைநகர் டெல்லிக்கு இண்டிகோ விமானம் ( 6E-2126) ஒன்று செல்லவிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் திடீர் என தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பயணியின் இந்த செயலால் கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அவர்கள் வந்து விமானத்திலும், சம்மந்தப்பட்ட பயணியின் பையிலும் நடத்திய சோதனையில், வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும் இது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காரணம் என்ன என்பது குறித்து போலிஸார் எந்த தகவலும் கூறவில்லை.
பின்னர் பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் டெல்லி புறப்பட்டது. இந்த சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!