India
நேற்று ஹரியானா.. இன்று ஜார்கண்டில்: பெண் போலிஸ் அதிகாரி வாகனம் ஏற்றி கொலை!
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியி நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் சந்தியா டாப்னோ மற்றும் போலிஸார் வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றி வந்த பிக்-அப் டிரக்கை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அந்த வாகனம் நிறுத்தாமல் போலிஸார் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உதவி ஆய்வாளர் சந்தியா டாப்னோ உயிரிழந்துள்ளார். மேலும் சில போலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து வாகனத்திலிருந்த நிசார் என்பவரை போலிஸார் பிடித்து கைது செய்துள்ளனர். வாகனத்திலிருந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் நேற்று, சட்டவிரோதமாக சுரங்கத்தில் கற்கலை வெட்டி எடுப்பதை தடுக்க சென்ற போலிஸ் அதிகாரி மீது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் இன்று ஜார்கண்ட் மாநிலத்திலும் பெண் போலிஸ் அதிகாரி வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!