India
தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்.. நீட்தேர்வு எழுதவந்த மாணவிகளை அவமதித்த அதிகாரிகள்!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில், மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரி பரிசோதித்த தேர்வு மைய கண்காணிப்பாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் உள்ளாடைகளில் உலோக ஹூக்குகள் இருப்பதால் அவர்களைத் தேர்வு மையத்தில் அனுமதிக்கமுடியாது என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதனால் மாணவிகள் தங்களின் உள்ளாடைகளை கழிட்டிவிட்டு தேர்வு மையத்திற்குச் சென்றுள்ளனர். மேலும் ஒரு அறையில் மாணவிகளில் உள்ளாடைகளைத் தேர்வு மைய அதிகாரிகள் குவியலாக போட்டுள்ளனர். தேர்வு மைய அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மாணவிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவலம் குறித்து மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தந்தை ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேடும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!