India
மனைவி செயலால் அதிர்ச்சியடைந்த கணவன்.. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்: நடந்தது என்ன?
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரத்தைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவரது மனைவி பூனம். இந்த தம்பதிக்குத் திருமணமானதில் இருந்து குழந்தை இல்லை. இதனால் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமா என மனைவியுடன் அஜய்குமார் ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அஜய்குமார் தத்தெடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கணவனின் அந்த செயல் பூனமிற்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டிற்கு அழைத்து வந்த குழந்தை மீது தொடர்ந்த வெறுப்பைக் காட்டிவந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று பூனம் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ஊற்றியுள்ளார்.
பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அஜய்குமார் குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து மனைவி மீது அஜய்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்த பூனத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!