India
காயவைத்த துணியை எடுக்கும்போது நடந்த துயரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: சோகத்தில் கிராமம்!
தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் பர்வீன் இவர்களது குடிசை வீட்டில் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளும் பெற்றோர்களை கட்டிப்பிடித்தபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் 4 பேரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!