India
“நாளைக்கு மீண்டும் வருவேன்” : பட்டாக் கத்தியுடன் அரசு பள்ளிக்கு வந்து எச்சரிக்கை விடுத்த தந்தை ! (Video)
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சீருடைக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஒரு மாணவிக்கு சீருடைக்கான பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாணவியின் தந்தை பட்டாகத்தியுடன் பள்ளிக்கு வந்து தனது மகளுக்கு பணம் வராததைக் குறித்து கேட்டுள்ளார்.
வந்தவர் 24 மணி நேரத்துக்குள் தன் மகளுக்கான சீருடைக்கு உரிய பணத்தைக் கொடுக்காவிட்டால் நாளை மீண்டும் வருவேன் என எச்சரிக்கை விடுத்தார்.
பட்டாக் கத்தியுடன் மேலாடை இன்றி ஒருவர் பள்ளிக்கு வந்த மிரட்டல் விடுத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த நபர் மேல் பள்ளி முதல்வர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த மிரட்டல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!