India
"எதாவது தப்பு பண்ணினா.. என் தலையை நானே வெட்டிடுவேன்.." - நீதிபதியின் பேச்சால் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக ரிது ராஜ் அவஸ்தி பொறுப்பு வகித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் குறித்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவானது, இவர் தலைமையில் தான் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், பார்ட்டி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதில் உயர்நீதிமன்ற நீதிபதி வீரப்பா கலந்துகொண்டார். அப்போது ஒவ்வொருவரும் பேசும்போது நீதிபதி வீரப்பாவும் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "நீதிமன்ற நடவடிக்கைகளின்போது அவதூறாகவும், ஆதாரமற்ற வகையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுவதாக சில வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நீதிபதியாக நான் ஏதேனும் தவறு செய்தால் விதானசவுதா (கர்நாடக சட்டமன்றம்) முன்பு நின்று நானே என் தலையை துண்டித்து கொள்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார்.
இவரது இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !