India
"எதாவது தப்பு பண்ணினா.. என் தலையை நானே வெட்டிடுவேன்.." - நீதிபதியின் பேச்சால் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக ரிது ராஜ் அவஸ்தி பொறுப்பு வகித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் குறித்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவானது, இவர் தலைமையில் தான் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், பார்ட்டி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதில் உயர்நீதிமன்ற நீதிபதி வீரப்பா கலந்துகொண்டார். அப்போது ஒவ்வொருவரும் பேசும்போது நீதிபதி வீரப்பாவும் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "நீதிமன்ற நடவடிக்கைகளின்போது அவதூறாகவும், ஆதாரமற்ற வகையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுவதாக சில வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நீதிபதியாக நான் ஏதேனும் தவறு செய்தால் விதானசவுதா (கர்நாடக சட்டமன்றம்) முன்பு நின்று நானே என் தலையை துண்டித்து கொள்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார்.
இவரது இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!