India
ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட ஸ்கூட்டரில் வெடித்து சிதறிய பேட்டரி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து நாசம்!
வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. அதற்கு முழுமுதற் காரணமாக பெட்ரோல், டீசலின் விலையேற்றத்தை குறிப்பிடுகின்றனர். மக்களின் தேவையை உணர்ந்த நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்கின.
பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்கை தயாரித்து வரும் நிலையில், அந்தவாகனங்களில்பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், தீவிபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் கூட, வேலூரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபதில் பல எலக்ட்ரிக் பைக் எரிந்து சேதமடைந்தது. கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் நாகுரி என்ற இடத்தில் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் விற்பனை மையம் உள்ளது.
அப்போது வழக்கம் போல நிறுத்திவைக்கப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புதிய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் தீக்கிரையாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர் பல லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!