India
தொழில் நஷ்டம்.. போலி சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற 3 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை? : ‘பகீர்’ சம்பவம்!
ஆந்திர மாநிலம், பேரெட்டி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி யாமினி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் புனர்விகா, பூர்விகா என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பொக்லைன் இயந்திரம் தொழிலில் வேணுகோபாலுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரோ சூனியம் வைத்ததால்தான் தான் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நினைத்துள்ளார்.
மேலும் அவருக்குத் தெரிந்த சாமியார் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, நரபலி கொடுத்தால் நிலைமை சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் பூஜை செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நினைத்துள்ளார்.
இதன்படி வீட்டில் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார். அப்போது குழந்தைகளுக்கு முகத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றியுள்ளார். பின்னர் குழந்தை புனர்விகா வாயில் குங்குமத்தைத் திணித்துள்ளார். இதில் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்து குழந்தையைத் தந்தை நரபலி கொடுத்தாரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!