India
வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. நடுரோட்டில் அடித்தே கொன்ற மக்கள்: டெல்லியில் பயங்கரம்!
டெல்லி தாப்ரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த நபர் தனது 5 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அந்த நபரை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தையைப் பொதுமக்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !