India
” ’தமிழ்நாடு மாடலை’ பின்பற்றுங்கள்” : மக்களவையில் நிதின் கட்கரி கூறியது என்ன ?
ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருந்தார்.
அப்போது, புனே மற்றும் கோவா போன்ற நகரங்களில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சாலைகளை போன்று சென்னையில் துறைமுகத்தில் இருந்து புறநகரை இணைக்கும் வகையில் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது என நிதின் கட்கரி கூறினார்.
மேலும், ஆட்சி மாற்றம், அனுமதிகள் பெறுவதில் காலதாமதம், ஒப்பந்ததாரர்களிடையேயான பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் சில திட்டங்கள் முடங்கியதாக தெரிவித்த அவர், விரைவில் அவை சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துகளை தடுப்பதில் தமிழ்நாடு மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சாலை போக்குவரத்துத் துறை நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Delimitation : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய திட்டம்!
-
ஆளுநர் சொன்னதற்கு எல்லாம் தவெக தலையாட்டி விட்டது : பிறகு எதற்கு முரண்டு பிடிக்கப் போகிறார்? - முரசொலி!