India
” ’தமிழ்நாடு மாடலை’ பின்பற்றுங்கள்” : மக்களவையில் நிதின் கட்கரி கூறியது என்ன ?
ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருந்தார்.
அப்போது, புனே மற்றும் கோவா போன்ற நகரங்களில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சாலைகளை போன்று சென்னையில் துறைமுகத்தில் இருந்து புறநகரை இணைக்கும் வகையில் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது என நிதின் கட்கரி கூறினார்.
மேலும், ஆட்சி மாற்றம், அனுமதிகள் பெறுவதில் காலதாமதம், ஒப்பந்ததாரர்களிடையேயான பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் சில திட்டங்கள் முடங்கியதாக தெரிவித்த அவர், விரைவில் அவை சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துகளை தடுப்பதில் தமிழ்நாடு மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சாலை போக்குவரத்துத் துறை நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?