India
” ’தமிழ்நாடு மாடலை’ பின்பற்றுங்கள்” : மக்களவையில் நிதின் கட்கரி கூறியது என்ன ?
ஒன்றிய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மக்களவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருந்தார்.
அப்போது, புனே மற்றும் கோவா போன்ற நகரங்களில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சாலைகளை போன்று சென்னையில் துறைமுகத்தில் இருந்து புறநகரை இணைக்கும் வகையில் மூன்றடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது என நிதின் கட்கரி கூறினார்.
மேலும், ஆட்சி மாற்றம், அனுமதிகள் பெறுவதில் காலதாமதம், ஒப்பந்ததாரர்களிடையேயான பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் சில திட்டங்கள் முடங்கியதாக தெரிவித்த அவர், விரைவில் அவை சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துகளை தடுப்பதில் தமிழ்நாடு மாடலை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சாலை போக்குவரத்துத் துறை நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!