India
“ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. தோல்வியில் முடிந்த 16 மணி நேரப் போராட்டம்” : நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம், பத்சத் கிராமத்தைச் சேர்ந்த கரவ் துபே என்ற 4 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி உள்ளே விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சிறுவனை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து 16 மணிநேர போராட்டத்திற்குப் பின்பு சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர், பெற்றோர்களின் முன்னிலையில் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் முடிவதற்குள் ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் 55 அடி அழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். சிறுவனை உயிருடன் மீட்பதற்கான பணிகளை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.
உலகம் முழுவதுமே ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பு சம்பவங்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்கதையாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!