India
மாணவர்களுக்கு நற்செய்தி : ”இனி ஆன்லைனிலும் பட்டப்படிப்பு படிக்கலாம்” - அனுமதி வழங்கிய UGC !
நாடுமுழுதும் 900 கல்லூரிகளில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க யு.ஜி.சி அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பில் சேர்ந்து படிக்க பல்கலைக்கழக மானியக் குழு புதிய வரைவுத் திட்டத்தை வகுத்துள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் அதே பாடதிட்டத்தின் படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
ஆன்லைன் மூலம் தேர்வுகளையும் நடத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டில் முன்னணியில் உள்ள கல்லூரிகள் ஆன்லைன் பட்டங்களை வழங்க அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் உயர்தரமான சுயநிதி கல்லூரிகள் அதிகமாக உள்ளன. அந்தக் கல்லூரிகளால் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு கல்வியை வழங்க முடியும்.
மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளில் படிப்பது போன்றதுதான் இதுவும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத்தலைவர் ஜகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!