India
Leave கொடுக்க மறுத்த அதிகாரிகள்.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து ரயில்வே ஊழியர் தற்கொலை:உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் பத்பூவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவர் ரயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வரும் 19ம் தேதி ரமேஷ் சிங்கின் மைத்துனருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் ரமேஷ் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சல் அடைந்த அவர் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 72 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!