India
Leave கொடுக்க மறுத்த அதிகாரிகள்.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து ரயில்வே ஊழியர் தற்கொலை:உ.பி.யில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் பத்பூவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் சிங். இவர் ரயில்வேயில் டிராக்மேனாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வரும் 19ம் தேதி ரமேஷ் சிங்கின் மைத்துனருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இதனால் ரமேஷ் அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், மன உளைச்சல் அடைந்த அவர் சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 72 மணி நேரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!