India
பழிவாங்கும் படலத்தின் உச்சம்; மருத்துவர் மகனை கொன்ற கம்பவுன்டர்கள் - உ.பியில் பயங்கரம்!
தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில் எதிரிகள், விரோதிகள் எவரும் இருக்கிறார்களா யார் மீதேனும் சந்தேகம் இருக்கிறதா என விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கிளினிக்கில் பணியாற்றி வந்த நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகிய இரண்டு கம்பவுண்டர்கள் ஒழுங்காக பணியாற்றாத காரணத்தால் வேலையை விட்டு நீக்கினேன் எனக் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அவர்களை இருவர் தொடர்பாக சாத்ரி போலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அவர்கள்தான் சிறுவனை கடத்தியிருக்கக் கூடும் என ஆதாரங்களை திரட்டியதோடு இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.
அப்போது இருவரும் மருத்துவரின் மகனை கடத்தி கொன்றுவிட்டதாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து கொல்லப்பட்ட மருத்துவர் மகனின் சடலத்தை போலிஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!