India
“செல்போன் பயனாளிகளுக்கு புதிய சலுகை” : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ‘டிராய்’ சொன்ன அதிரடி உத்தரவு என்ன?
இந்தியாவில் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களின் ப்ரீ பெய்டு திட்டத்திற்கான காலத்தை 28 நாட்கள் மட்டுமே நிர்ணயித்து வருகின்றன. உதாரணமாக, ஒரு மாதத்திற்கு செல்போன் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் மட்டுமே இந்த கட்டணத்திற்கான காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 13 முறை முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
இது குறித்து பயனாளிகள் பல மாதங்களாகப் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் ப்ரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களின் திட்ட வவுச்சர், டாரிப் வவுச்சர், காம்போ ஆப்பர் உள்ளிட்ட அனைத்திலும் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் பயனாளிகளுக்கு மாதம் இரண்டு நாட்கள் கூடுதலாகப் பயன்படுத்த முடியும். மேலும் ஏற்கனவே ஏர்டெல், வோடஃபோன், ஜியோ போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் டிராயின் உத்தரவை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
உருகிய வெனிசுலாவின் கடைசி பனிப்பாறை : பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை !
-
"இந்தியா முழுக்க சாதிய ஏற்றத்தாழ்வு உள்ளது" - இயக்குனர் வெற்றிமாறன் !
-
உலக சாம்பியனை மீண்டும் வீழ்த்திய தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா : மூன்றாம் இடத்துக்கு முன்னேறி அசத்தல் !
-
"புது சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்"- 41 வயதில் ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் !
-
"இஸ்ரேலால் ஆபத்து ஏற்பட்டால் அணுக்குண்டை உருவாக்கவேண்டியிருக்கும்" - ஈரான் எச்சரிக்கை !