India
கண்ணை மறைத்த ஆத்திரம்; 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு மனைவியை கொல்ல முயன்ற கணவர்; புனேவில் பகீர்!
மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான அந்த கணவர் மனைவியை நான்காவது மாடியில் இருந்து லிஃப்டின் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார்.
இதில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலில் விழுந்த அந்த பெண்ணுக்கு முகுதுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்ட அக்குடியிருப்பு வாசிகள் பெண்ணை மீட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் உதவி காவல் ஆய்வாளர் பி.யு.கப்புரே கூறியதாவது, “கொந்த்வா புத்ரக் பகுதியில் உள்ள கக்தே வஸ்தி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார் நிதின். பெயின்டராக இருக்கும் இவருக்கும் இவரது மனைவிக்கும்தான் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை லிஃப்ட் வழியாக தள்ளிவிட்ட நிதின் மீது மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!