India
கண்ணை மறைத்த ஆத்திரம்; 4வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு மனைவியை கொல்ல முயன்ற கணவர்; புனேவில் பகீர்!
மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் கணவரை புனே போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
25 வயதான மனைவிக்கும் 32 வயதான கணவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமையன்று குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கடுமையான ஆத்திரத்துக்கு ஆளான அந்த கணவர் மனைவியை நான்காவது மாடியில் இருந்து லிஃப்டின் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார்.
இதில் அடித்தளத்தில் இருந்த மண் குவியலில் விழுந்த அந்த பெண்ணுக்கு முகுதுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சத்தம் கேட்ட அக்குடியிருப்பு வாசிகள் பெண்ணை மீட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் உதவி காவல் ஆய்வாளர் பி.யு.கப்புரே கூறியதாவது, “கொந்த்வா புத்ரக் பகுதியில் உள்ள கக்தே வஸ்தி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார் நிதின். பெயின்டராக இருக்கும் இவருக்கும் இவரது மனைவிக்கும்தான் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை லிஃப்ட் வழியாக தள்ளிவிட்ட நிதின் மீது மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!