India
'விலை என்னவோ ரூ.10 தான்; ஆனா டிக்கெட் ரூ.50' - வைரலாகும் கோழிக்குஞ்சுக்கான பஸ் டிக்கெட்!
கர்நாடகாவின் ஷிவமோக மாவட்டத்தின் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்தில் பழங்குடி குடும்பம் ஒன்று பயணித்திருக்கிறது.
அவர்களிடம் பயணச்சீட்டு விநியோகிக்கும் போது அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து ஓசை வந்ததும் நடத்துனர் என்னவென்று பரிசோதித்திருக்கிறார். அதில் கோழிக்குஞ்சு ஒன்று இருந்திருக்கிறது.
இதனையடுத்து கோழிக்குஞ்சுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துநர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பழங்குடி குடும்பத்தினர் கோழிக்கு டிக்கெட் எடுக்க மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் விதிமுறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியதை அடுத்து கோழிக்குஞ்சுக்கும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. வெறும் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கோழிக்குஞ்சுக்கான பேருந்து கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு பழங்குடியின குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும் கோழிக்குஞ்சுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட பயணச் சீட்டு தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!