India
'விலை என்னவோ ரூ.10 தான்; ஆனா டிக்கெட் ரூ.50' - வைரலாகும் கோழிக்குஞ்சுக்கான பஸ் டிக்கெட்!
கர்நாடகாவின் ஷிவமோக மாவட்டத்தின் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்தில் பழங்குடி குடும்பம் ஒன்று பயணித்திருக்கிறது.
அவர்களிடம் பயணச்சீட்டு விநியோகிக்கும் போது அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து ஓசை வந்ததும் நடத்துனர் என்னவென்று பரிசோதித்திருக்கிறார். அதில் கோழிக்குஞ்சு ஒன்று இருந்திருக்கிறது.
இதனையடுத்து கோழிக்குஞ்சுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துநர் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பழங்குடி குடும்பத்தினர் கோழிக்கு டிக்கெட் எடுக்க மறுத்திருக்கிறார்கள்.
ஆனால் விதிமுறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கூறியதை அடுத்து கோழிக்குஞ்சுக்கும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது. வெறும் 10 ரூபாய்க்கு வாங்கப்பட்ட கோழிக்குஞ்சுக்கான பேருந்து கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு பழங்குடியின குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மேலும் கோழிக்குஞ்சுக்கும் சேர்த்து எடுக்கப்பட்ட பயணச் சீட்டு தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!