India
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 20 பேர் காயம் : போலிஸ் தீவிர விசாரணை!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கீழமை நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது நீதிமன்றம் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலிஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!