India
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 20 பேர் காயம் : போலிஸ் தீவிர விசாரணை!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கீழமை நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது நீதிமன்றம் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலிஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!