India
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி - 20 பேர் காயம் : போலிஸ் தீவிர விசாரணை!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கீழமை நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது நீதிமன்றம் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்துள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலிஸார் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!