India
“தலை இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்த இளம்பெண்” : லாட்ஜில் நடந்த கொடூர கொலை - மும்பை போலிஸார் தீவிர விசாரணை!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மாதேரன் மலைப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு பூனம் பால் (30) என்ற பெண் தனது நண்பர்களுடன் வந்து தங்கியிருந்திருக்கிறார். இந்நிலையில் மறுநாள் காலை வெகுநேரமாகியும் பூனம் மற்றும் அவரது நண்பர்கள் வெளியே வராத நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பூனம் அறையை சுத்தம் செய்யச் சென்றுள்ளார்.
அப்போது அறையில் பூனம் தலை இல்லாமல் நிர்வாணமாக இறந்துகிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த முதற்கட்ட தகவல் குறித்து போலிஸார் ஒருவர் கூறுகையில், இறந்த பெண்ணுடன் இரண்டு ஆண்கள் முகக்கவசம் அணிந்து வந்ததால், அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் பெண்ணின் அடையாளத்தை மறைக்கவே பெண் தலையையும், அவரின் உடையையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர்.
விடுதியில் தங்குவதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் கொடுக்காததால், பெண் குறித்து முழுமையான தகவல் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
-
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!
-
முதலமைச்சர் விஜய்க்கு “நாவடக்கம் என்பது மிக மிக அவசியமான ஒன்று” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி தாக்கு!
-
இது Party FUND இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி!