India
உணவு தேடி அலைந்து ஜன்னலை உடைத்து கிச்சனை துவம்சம் செய்த காட்டு யானை; பந்திப்பூரில் பரபரப்பு!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தை ஒட்டி கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இந்த வனப் பகுதியிலிருந்து யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்பிற்கு வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பக சரணாலயம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானை விடுதியின் சமயலறை ஜன்னலை தந்தங்களால் உடைத்து தலையை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து உணவை தேடி அங்குள்ள பொருட்களை சேதபடுத்தி உணவை துதிக்கையால் எடுத்து சாப்பிட, விடுதியில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியும் யானை அங்கிருந்து செல்லாமல் அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து சென்றது.
விடுதியில் இருந்தவர்கள் பயந்து உள்ளேயே பதுங்கி இருந்தனர். இந்த காட்சிகளை விடுதியில் இருந்தவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !