India
“துண்டு எடுத்து வர லேட்” : மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் - ம.பி.யில் ‘பகீர்’ சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்திற்குட்பட்ட கிர்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே. இவரது மனைவி புஷ்பா பாய்.
இந்நிலையில் நேற்று ராஜ்குமார் குளித்து முடித்துவிட்டு தனது மனைவியிடம் துண்டு எடுத்து வரும்படி கூறியுள்ளார். அப்போது புஷ்பா பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்துள்ளார். இதனால் சிறிது நேரம் காத்திருக்கும்படி கணவனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த மண்வெட்டியால் மனைவியின் தலையில் பலமுறை அடித்துள்ளார். அப்போது தடுக்க வந்த மகளையும் அவர் மிரட்டியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் மனைவி புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து புஷ்பாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கணவன் ராஜ்குமாரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!