India
சின்ன இடப்பிரச்னை; கொலையில் முடிந்த தீப ஒளி கொண்டாட்ட வாக்குவாதம் : கர்நாடகாவில் நடந்த விபரீதம்!
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் ரதவீதியில் வீர வெங்கடேசா அடுக்குமாடி குடியிருப்பில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நடந்த சிறு வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
வீர வெங்கடேஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விநாயகக்காமத் (44 வயது) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கிருஷ்ணாநந்த கினி மற்றும் அவரது மகன் அவிநாஷ்கினி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் சிமெண்ட் சாலையில் காரை இயக்கியது தொடர்பாக நேற்று இரவு விநாயகா காமத் மற்றும் கிருஷ்ணிநந்த கினி ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு முற்றி கொலையில் முடிந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது நடந்த கத்திக்குத்துச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
காயமடைந்த விநாயகாகாமத் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமாக பந்தர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணானந்த் கினி மற்றும் அவரது மகன் அவினாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!