India
"ஜீன்ஸ் போட்டிருக்க.. உனக்கு பொருட்கள் விற்க முடியாது" : கடை உரிமையாளரின் செயலால் அதிர்ச்சியடைந்த பெண்!
அசாம் மாநிலம், சரியாளி என்ற பகுதியில் நூருல் ஆமின் என்பவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஜீன்ஸ் உடை அணிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார்.
இதைப் பார்த்த கடை உரிமையாளர் நூருல் ஆமின், "எனது கடையில் இருக்கும் பொருட்களை உனக்கு விற்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், "ஜீன்ஸ் அணிந்திருக்கும் பெண்களுக்கு நான் பொருட்களை விற்பனை செய்வதில்லை" எனக் கூறி அந்த பெண்ணை அவமதித்துள்ளார். மேலும் உடனே கடையிலிருந்து வெளியேறும்படியும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் கடைக்கு வந்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது நூருல் ஆமின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்துகொண்டு அந்தப் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நூருல் ஆமினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்