India
“ஆள்மாறாட்டம் செய்து 25 பேரை தேர்வு எழுத வைத்தேன்” : நீட் மோசடி கும்பல் தலைவன் அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பல மாநிலங்களில் பல்வேறு மோசடிகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற தேர்வின்போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பல் மருத்துவ மாணவி மற்றும் அவரது தாயாரை போலிஸார் கைது செய்தனர்.
அதேபோல் திரிபுராவைச் சேர்ந்த ஒரு மாணவனுக்காக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவியையும் போலிஸார் கைது செய்தனர். இதற்காக அந்த மாணவிக்கு ரூ. 5 லட்சம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த ஆள்மாறாட்டம் குறித்து போலிஸார் விசாரணை செய்ததில், நன்கு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பணத்தாசை காட்டி தேர்வு எழுத வைத்தது விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இப்படி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைப்பதற்காகவே ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனான பாட்னாவைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவரை வாரணாசி போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைத்துள்ளதை அறிந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என போலிஸார் தேசிய தேர்வு முகமைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!